Tuesday, December 15, 2009

நான் வெளியிட்ட "பக்திப் பூக்கள்" தொகுப்புகள்

வணக்கம்

எனது இந்த பக்திப்பூக்கள் தொகுப்பு எனது சிறிய முயற்சியால் உருவானது. இதுவரை ஆஞ்சநேயர் வழிபாடு, திருவிள்க்கு வழிபாடு, இராகுகாலப் பூஜை, கேதார கௌரி விரதம், மஹாலக்ஷ்மி வழிபாடு, வைரவர் வ்ழிபாடு என ஆறு தொகுப்புக்கள் வெளிவந்தன. எனது இந்த முயற்சிக்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் - 'அம்மா' என அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளாரின் ஆசி கிடைத்தது எனக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். அதுமட்டுமல்ல - எத்தனையோ பெரியவர்களின் வாழ்த்தும் ஆசியும் என்னை மேலும் தொகுக்க காரணமாக் அமைந்தன.

இந்த தொகுப்பு விபரங்கள் எளிய தமிழில் எழுத வேண்டும் என விரும்பினேன். சாதாரண பாமர மக்களும் படித்து பயன் பெற வேண்டும் என்பதே என் ஆவல்!

ஆதிசங்கரர் கூறுகிறார்:
'எதையும் நானாக எழுதவில்லை - வசிஷ்டர் விசுவாமித்திரர் போன்ற ஞானிகளிடமிருந்து பெற்றதே "என்பதற்க்கிணங்க இந்த விரத விபரங்களைப்பற்றிய தகவல்கள் என் சொந்தமாக நான் எழுதியதல்ல! விரதங்களைப்பற்றி நான் சுயமாக எடுத்து சொல்ல முடியாதல்லவா?

எனவே எத்தனையோ நூல்களிலிருந்து சிறுகச் சிறுக சேர்த்து தொகுக்கப்பட்டதே இவை. இதன் மூலம் எத்தனையோ நூல்களைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அறிந்து கொண்டதை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் வெளிவந்ததே இந்தத் தொகுப்புக்கள்.

இலங்கையின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல நாடுகளைச் சேர்ந்தோரும் இப்புத்தகங்களை வாங்கி பயனடைந்திருக்கிறார்கள் என எண்ணும்போது இறைவனின் அருளாசி தான் இதற்கு காரணமாகிறது என உணர்கிறேன்.

உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் எனது இந்த சிறு முயற்சிக்கு வேண்டும்.

நன்றி!!!!

கௌரி விமலேந்திரன்


எனது தொகுப்புக்கள்

1. ஆஞ்சநேயர் வழிபாடு - 2001

2. திருவிளக்கு வழிபாடு - 2001

3. இராகு காலப்பூஜை - 2003

4. கேதார கௌரி விரதம் - 2004

5. ஸ்ரீ மஹாலக்ஷ்மி - 2005

6. ஆஞ்சநேயர் வழிபாடு தொகுதி 2

7. வைரவர் வழிபாடு - 2005


மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி சித்தர் பீடம்
அருட்திரு பங்காரு அடிகளாரின் ஆசி


ஆன்மீகம் வளர நல்ல புத்தகங்களை தொகுத்து எழுதுகிறாய்.
இன்னும் இன்னும் நிறைய எழுது.நல்ல காரியங்களை அழகாக
செய்யும் உனக்கு அம்மாவின் ஆசிகள்.

- *அம்மா*



கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை
இராகுகாலப் பூஜை - தொகுப்பு நூல்

ருட்பாடல்களைப் பாடுவதும் எழுதி வெளியிடுவதும் எழுதுவோருக்கு வாழ்த்து வழங்குவதும் சமயநெறி நிற்போரின் இன்றியமையாத கடமையாகும். எழுதும் பணியைத் தன் பணியாக ஏற்று வாழும் திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் சைவப்பற்றும் தமிழ்ப் பற்றும் மிக்கவராவர். "பக்திப் பூக்கள்" என்ற வரிசையில் ஆஞ்ஜநேயர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு என்பவை வெளிவந்து இருப்பது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தற்போது "இராகுகாலப் பூஜை" என்பது பற்றிய தொகுப்பு நூல் ஒன்று வெளிவர இருப்பது பாராட்டுக்குரியதாகும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று பாடினார் மாணிக்க வாசக சுவாமிகள். திருமதி கௌரி அவர்களும் இறையருள் வழிகாட்ட இந்நூல்களை எழுதி வழங்குகிறார்கள். என்வே இவற்றையெல்லாம் எமது இளைய சந்ததியினரும் முதியவர்களும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்களாக என்று வாழ்த்தி அமைகின்றேன்.

கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

தலைவர், ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, ஸ்ரீ லங்கா.



சிவநெறிக் கலாநிதி, சைவநன்மணி சிவமயச் செல்வி
புலவர் ஸ்ரீ விசுவாம்பா மாதாஜி
அவர்கள் வழங்கும்

ஆசியுரை

கிரக தோஷம் என்பன இன்று நேற்றல்ல, ஆதி காலத்திலும் அதாவது வேத காலம் தொடக்கம் இன்றுவரை மனிதன் பிறந்த நாள் நட்சத்திரம், பூர்வீகப் புண்ணியம் ஊழ்வினைப்படி கிரகதோஷம் உண்டாவது நியதியாகும்.

குரு, சனி, ராகு கேது என்பவை தாம் இருக்கும் வீட்டைப் பார்க்கும் நட்சத்திர நாட்காரரை ஒருகை பார்கும் என்பது சாஸ்திரக்காரரின் கூற்றாகும். இவைகளை நாம் அனுபவம் மூலம் அறியலாம். குரு எட்டாமிடத்தில் இருந்தால் தன்னொடு ஒத்த நட்சத்திரக்காரரை ஆட்டிப் படைக்கும். இவ்வாறே ஒவ்வொரு கிரகங்களின் கோட்பாடாகும்.

அதனால் இறைவழிபாட்டுடன் கிரகங்களையும் வலம் வந்து வணங்க வேண்டுமென்பதற்காக ஆலயங்களில் வடகிழக்கில் நவக்கிரக சந்நிதானம் இருப்பதை காண்கிறோம்.

பண்டைக் காலத்தில் மக்கள் கிரகதோஷங்களில் இருந்து விலகி நடப்பதிற்காக துர்க்கைச் சித்தர் அகத்தியர் முதலியோர் கிரகதோஷங்களின் தெய்வங்களைப் பாடியுள்ளனர்.நாள் வணக்கம், மாத வணக்கம் கூடப் பாடப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் தொகுத்து ஒரே பார்வையில் ஒரே நூலில் திருமதி கௌரி விமலேந்திரன் அவர்கள் தந்துள்ளார்.

திருமதி கௌரி விமலேந்திரன் தம்பதிகள் சிறந்த ஆன்மீக, ஆத்மீக தாகம் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவில் உள்ள கோயில்கள் எல்லாம் தல தீர்த்த யாத்திரை செய்ததுடன் பல ஞானிகளையும் தரிசித்து சித்தி பெற்றவர்கள்.

திருமதி கௌரி விமலேந்திரனின் மனையகம் ஓர் கோயிலோ என்று சிந்தித்து உணரக்கூடிய உணர்வுகளை அவர்களின் மனை செல்வோர் அறிவர். இடபமும் சிவலிங்கம் (ஸ்படிகம்) காணக்கூடியதாக உள்ளது. உண்மையாக திருமதி கௌரி விமலேந்திரன் சிறந்த தெய்வீக பக்தியின் மிகுதியினால் சிறப்பாகப் பெண்களிடையே தோஷபீடை அணுகாது இந்நூலை இயற்றியது பாராட்டுதற்குரியது. வரவேற்கக்கூடியது.இந்நூலைப் பெற்று கன்னிப் பெண்களானலும் சரி இல்லறவாசிப் பெண் ஆண்களானாலும் சரி முக்கர சுத்தியுடன் கூறப்படுகின்ற விதிகளுடன் மங்கள விளக்கேற்றி, வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் பாராயணம் செய்து வருவார்களானால் சுபீட்சம் அடைவார்கள் என்பது உண்மையாகும். என்வே இத்தகைய நூலைத் தொகுது வெளியிட்டுத் தந்த திருமதி விமலேந்திரன் அவர்களை ஆசீர்வதிப்பதிப்பதுடன் மேலும் இது போன்ற நூல்களை வெளியிடப் பிரார்த்தனை செய்கின்றேன்.
வணக்கம்
சாந்தி !

மாதாஜி

இந்த நூல்களைப் பற்றிய விபரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

gowrivimal@gmail.com

2 comments:

Kanags said...

வலைப்பதிவுலகிற்கு வரவேற்கிறேன். தொடர்ந்து நல்ல தொகுப்புக்களைத் தாருங்கள். நன்றி.

கௌரி விமலேந்திரன் said...

ந்ன்றி.