Sunday, July 17, 2022

ஆடிப்பிறப்பு 2022

 --------------------

தை சித்திரைபோலஆடிமாதப்பிறப்பும் விசேஷமானது

தைமாதப்பிறப்புசித்திரை மாதப்பிறப்பு என்று சொல்வதுபோல ஆடிமாதப்பிறப்பு என்று சொல்லாமல்ஆடிப்பிறப்பு என்று சொல்வதே ஆடிமாததுக்குரிய தனிச் சிறப்பு

ஆடிப்பிறப்பென்றால் நமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைக்குரியவரான நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை..ஆனந்தம் ஆனந்தம் தோழர்களேஎன்ற இனிமையானமகிழ்ச்சிகரமான பாடலும்ஆடிக்கூழும்கொழுக்கட்டையும்தான்


என்றைக்குத்தான் இதை மறக்க முடியும்ஈழத்தமிழ் மக்கள் இதை என்றுமே மறக்க மாட்டார்கள்எத்தனைகஷ்டங்கள் வந்தாலும்இந்த ஆடிக்கூழ்அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும்இடம்பெற்றேயாகும்விதம்விதமான தின்பண்டங்கள்  இன்று பலராலும் புதிதுபுதிதாக எம் உணவில்சேர்க்கப்பட்டாலும்இந்த ஆடிக்கூழ் விசேஷமானதுதான்

வருடம் ஒருதடவை வரும்  இந்த நாளை எம் மக்கள் மிக விசேடமாகத்தான் கொண்டாடுகிறார்கள்இந்த நல்லநாளில் ஆலயம் செல்லும் மக்கள் ,  அசைவம் சாப்பிடுபவர்கள் அதைத்தவிர்த்து சைவமாக உணவருந்துவதும்ஆடிக்கூழ் காய்ச்சுவதும்கூழ்காய்ச்ச இயலாதவர்க்ளுக்கு கொடுத்து மகிழ்வதும்அயலவர்களுக்கு பகிர்ந்துகொடுப்பதும்மற்ற இனமக்களுக்கு கொடுத்து  தாம் உண்பதும் இந்த ஆடிப்பிறப்பில்தான்

இன்றைய காலத்தில் இவை நடைமுறையில் இருக்கிறதா என்பது சற்று பலரை சிந்திக்க வைக்கும்ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று பாடிமகிழ்ந்தனர்இன்று..அந்த விடுதலை இல்லையல்லவா


நம் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்த எம்மக்கள் இன்றைய தினத்தை மறக்காமல்கூழ் காய்ச்சிகொழுக்கட்டை அவித்து  உண்பது பாராட்டுக்குரியது.எங்கள் சைவப் பழக்கவழக்கங்களைஇயன்றவரைஏற்றுநடப்பதும்பெருமைக்குரியதுதான்


இதற்கு காரணம் அதில் ஊன்றிப்போன பெற்றோர்கள்தான்தம் பிள்ளைகளுக்கு அதை சொல்லிவளர்ப்பதும்மேல்நாட்டு பழக்கவழக்கங்களில் ஊன்றினாலும்எமது தமிழ் நாகரிக பண்புகளையும் மறக்காமல்எத்தனையோபேர் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்சியாகத்தன் இருக்கிறதுபெற்றோர் இதைப் பழக்கத்தில்கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள்வெளிநாடுகளில்இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றனவாழை இலைவேப்பிலை முதல் பனங்கட்டிபாசிப்பருப்புஈறாக இங்கு கிடைக்காவிட்டாலும்அங்கு கிடைக்கிறதுஅதைப்பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள்தம்மால் முடிந்தவரை நேரம் ஒதுக்கி இதனை செய்து மகிழ்கிறார்கள்


ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிச்செவ்வாய் தேடிக்குளிஅரைத்த மஞ்சல் பூசிக்குழிஆடிக்கூழ் அமிர்தம்...

இப்படி எத்தனை பழமொழிகள்..


நாமும் ஆடிப்பிறப்பை மகிழ்வோடு கொண்டாடுவோம்

விழாக்கள் அனைத்துமே ஆடிமாதத்திலிருந்து தொடங்குகின்றனதஷிணாயன புண்ணிய காலமும்தொடங்குகிறதுஇனிவரும் விழாக்களை கொண்டாட தயாராவோம்


ஆடிமாத்துக்குரிய சிறப்புக்களை அவரவர்கள் தம் ஊர்களில் இதனை எப்படி கொண்டாடி ,மகிழ்கிறார்கள்என்பதை பகிர்ந்து கொள்ளலாம்

தயங்காமல்எழுதி மற்றவர்க்ளும் அறிய தெரியப்படுத்துங்கள்.

நன்றி

ஓம் சக்தி

-சக்தி.கெளரி விமலேந்திரன்